நான் படித்த மாற்று சிந்தனை கொண்ட ஒரு நல்ல பதிவு,சிந்திக்கத் தூண்டும் பதிவு,
விடுதலை புலி ஆதரவு தமிழகத்தில் இன்று உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.அரசியல் கட்சிகள்,பத்திரிக்கைகள்,வழக்கறிஞர்கள் என்று எப்போதும் இல்லாத அளவிற்கு கண்மூடித்தனமான ஆதரவு பிரசாரம் இங்கு நடைப்பெறுகிறது.அரசியல் கட்சிகளிடையே நடைபெறும் போட்டா போட்டா போட்டி ,ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவுக்கு போயிருக்கிறது.
முன்பு யார் தமிழன் என்று கலைஞர் கருணாநிதி தான் சான்றிதழ் தருவார்!இவரிடம் சான்றிதழ் பெற்றால் தான் பச்சை தமிழன் ஆவான்.இல்லை என்றால் அவன் தமிழினதுரோகி என முத்திரை குத்தப்படுவான். தமிழினதுரோகி பட்டம் பெற்றவர்களுக்கு சில சமயம் ஜாதி சாயம் கூட பூசப்படும்.
இப்போது தமிழின வியாபாரத்தில் போட்டி அதிகமாகிவிட்டது. ஒரே கடைவீதியில் பலர் கடை வைத்து பிழைக்க வந்தபடியால் எப்படி தொழில் போட்டாப்போட்டி வருமோ , அது போல இப்போது தமிழின வியாபாரத்தில் டாக்டர் . கலைஞருக்கு போட்டியாக மருத்துவர் ஐயா ராமதாஸ்,தம்பி பிராபாகரனின் உடன் பிறவா சகோதரன் வைகோ அவருக்கு போட்டியாக முன்னால் காங்கிரஸ்வாதி பழ. நெடுமாறன் இவர்களுக்காக ஒத்து ஊத, வியாபார போட்டியில், திடீர் வரவு தொல்.திருமாவளவனின் அதிரடி வியாபரம் கலக்கியதால் ,கலகலத்து போயிருப்பது பழைய வியாபாரிகள் என்பது தான் உண்மை.
மேலூம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
Thursday, March 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment