Tuesday, September 22, 2009

திருமலை திருப்பதி - கணிணி வழி கற்பனை உலா காட்சி



திருமலை திருப்பதி - கணிணி வழி கற்பனை உலா காட்சி
(அப்பாடி ஒரு வழியா VIRTUAL TOUR க்கு ஒரு பெயர் வெச்சாச்சு)
ஏழுமலையான் அருள் மழை பொழியும்
திருமலை திருப்பதி ஆலயத்தின் தரிசனம்
கணிணி வழியே




Wednesday, September 16, 2009

பகவத் கீதை தமிழ் விளக்க உரை

உலகத்தில் அதிகம் மொழி பெயற்க்கப்பட்ட,அதிகமான பல்கலைக் கழகங்களில் அராய்ச்சிக்கான பாடமாக உள்ள,அறிஞர்களால் இது உலகிலே உள்ள நூல்களில் முதன்மையான நூல் என பாராட்டப்பட்ட,பகவான் கண்ணனால் மனித குல முன்னேற்றத்திற்க்கு நேரிடையாக வழங்கப்பட்ட கர்குத்துக்களின் தொகுப்பான
பகவத் கீதை தமிழ் விளக்க உரையுடன் ஒரு வீடியோ தொகுப்பாக

பாகம் 1

பாகம் 2


பாகம் 3


பாகம் 4

பாகம் 5





Wednesday, July 15, 2009

பாரிஸில் நடைபெற்ற கிருஷ்ணர் ரத யாத்திரை

பாரிஸ் மாநகரில் கடந்த 5 ஜூன் அன்று இஸ்கான் இயக்கத்தின் சார்பாக ஜகன்னாதர் ரத யாத்திரை நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது,ஏராளமான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ந்டத்தப்பட்டது.
கிருஷ்ண நாம ஜபம் அந்த இடம் எங்கும் ஒலிக்க,எதோ இந்தியாவின் ஆன்மீக தலத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது,குறிப்பாக முழுவதும் வெள்ளையர்களால் நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்ச்சி ஆச்சர்யத்தையும்,நாமே அணிய மறந்த அல்லது அணிய மறுக்கும் நமது பாரம்பர்யமான வேட்டி,சேலை மற்றும் இந்தியாவில் காணாமலே போய்விட்ட தாவணி போன்ற ஆடைகளை அவர்கள் அணிந்து கலந்து கொண்டதை பார்க்கும்போது மகிழ்ச்சியும்,நம் மீது நமக்கே ஒருஅவமானமும்,வெட்க்கமும் ஏற்ப்பட்டதை மறுக்க முடியாமல் இருந்தது.
இந்த நிகழ்ச்சியின் காணொளி காட்சியை கண்டு மகிழுங்கள்
































































Thursday, March 12, 2009

விடுத‌லை புலிகளை ஆத‌ரித்தால் தான் த‌மிழ‌ர்க‌ளா?

நான் படித்த மாற்று சிந்தனை கொண்ட ஒரு நல்ல பதிவு,சிந்திக்கத் தூண்டும் பதிவு,
விடுத‌லை புலி ஆத‌ர‌வு த‌மிழ‌க‌த்தில் இன்று உச்சக்க‌ட்ட‌த்தை எட்டி உள்ள‌து.அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள்,ப‌த்திரிக்கைக‌ள்,வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் என்று எப்போதும் இல்லாத‌ அள‌விற்கு க‌ண்மூடித்த‌ன‌மான‌ ஆத‌ர‌வு பிர‌சார‌ம் இங்கு ந‌டைப்பெறுகிற‌து.அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளிடையே ந‌டைபெறும் போட்டா போட்டா போட்டி ,ஒருவ‌ரை ஒருவ‌ர் மிஞ்சும் அள‌வுக்கு போயிருக்கிற‌து.
முன்பு யார் த‌மிழ‌ன் என்று கலைஞ‌ர் க‌ருணாநிதி தான் சான்றித‌ழ் த‌ருவார்!இவ‌ரிட‌ம் சான்றித‌ழ் பெற்றால் தான் ப‌ச்சை த‌மிழ‌ன் ஆவான்.இல்லை என்றால் அவ‌ன் த‌மிழின‌துரோகி என‌ முத்திரை குத்த‌ப்ப‌டுவான். த‌மிழின‌துரோகி ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு சில சமயம் ஜாதி சாய‌ம் கூட‌ பூச‌ப்ப‌டும்.
இப்போது த‌மிழின‌ வியாபார‌த்தில் போட்டி அதிகமாகிவிட்ட‌து. ஒரே க‌டைவீதியில் ப‌ல‌ர் க‌டை வைத்து பிழைக்க‌ வந்த‌ப‌டியால் எப்ப‌டி தொழில் போட்டாப்போட்டி வ‌ருமோ , அது போல‌ இப்போது த‌மிழின‌ வியாபார‌த்தில் டாக்ட‌ர் . க‌லைஞ‌ருக்கு போட்டியாக‌ மருத்துவ‌ர் ஐயா ராம‌தாஸ்,த‌ம்பி பிராபாக‌ர‌னின் உட‌ன் பிற‌வா ச‌கோத‌ர‌ன் வைகோ அவ‌ருக்கு போட்டியாக‌ முன்னால் காங்கிர‌ஸ்வாதி ப‌ழ‌. நெடுமாற‌ன் இவ‌ர்க‌ளுக்காக‌ ஒத்து ஊத‌, வியாபார‌ போட்டியில், திடீர் வ‌ர‌வு தொல்.திருமாவ‌ள‌வ‌னின் அதிர‌டி வியாப‌ர‌ம் க‌ல‌க்கிய‌தால் ,கல‌க‌ல‌த்து போயிருப்ப‌து ப‌ழைய‌ வியாபாரிக‌ள் என்ப‌து தான் உண்மை.
மேலூம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Wednesday, March 11, 2009

கிருத்துவர்கள் தாக்கப்படுவது சரி, அவர்கள் செய்வது சரி என்றால்.

கிருத்துவர்கள் தாக்கப்
படுவது சரி, அவர்கள் செய்வது சரி என்றால்.

சத்ய தர்ஷினி” என்று ஒரு புத்தகம். அதில், இந்து கடவுள்கள் மீது வீசப்பட்டுள்ள தரக் குறைவான, சொல்லக் கூசும் தாக்குதல்கள். இவைதான் அங்கே மதக் கலவரத் தீயை மூட்டி விட்டுள்ளன.
மேலூம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Saturday, February 28, 2009

போகப்போக தெரியும்(கடவுள் மறுப்பு இயக்கம் பற்றிய க.சுப்புவின் கட்டுரைகள்)

1) கிறிஸ்தவர்கள் செய்யும் அண்ட மோசடி ஆகாச மோசடிகளில் இதுவும் ஒன்று. அப்பத்தைப் பங்கிடவும் அவ்வப்போது ஜெபிக்கவும் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். சட்டத்தை வளைக்கவும் சாமானியர்களை ஏமாற்றவும் ஹிந்துவாகப் பதிவு செய்துகொள்வார்கள். பாரத தேசத்தின் மீது சில ஒட்டடைகள் படிந்துள்ளன. சிலந்திகள் சிலவும் சேர்ந்து இழுத்துப் பார்க்கின்றன. சுதந்திர தேவியின் இருப்பிடத்தை நாம் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
2) ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த தொடர் ‘சுவருக்குள் சித்திரங்கள்’. தியாகு என்றழைக்கப்படும் தியாகராஜன் கல்லூரி மாணவராக இருந்த போதே படிப்பை உதறிவிட்டு நக்சலைட்டாக மாறினார். அந்த இயக்கத்தின் கட்டளையை ஏற்று ஒரு பண்ணையாரைக் கொலை செய்தார். பிறகு பிடிபட்டு ஆயுட்கைதி ஆனார். அவருடைய சிறை அனுபவங்கள்தாம் இந்தத் தொடர்.
தூக்குத் தண்டனைக் கைதிகளைக் கிறிஸ்துவ போதகர்கள் அணுகும் முறை பற்றியும், மதமாற்ற நடவடிக்கைகள் பற்றியும் விவரமாகச் சில பக்கங்கள் இதில் உண்டு. மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
3) தமிழகத்தில் சமூக, அரசியல் சூழலில் இடஒதுக்கீடு கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. கேள்வி கேட்ட வழக்கறிஞர் விஜயனின் எலும்புகளை அம்மாவின் பிள்ளைகள் அடித்து நொறுக்கிவிட்டார்கள். நம்முடைய கருத்துப்படி இடஒதுக்கீடு அவசியம்தான். ஆனால் நாம் கேட்கப்போவது வேறுவிதமான கேள்வி. கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் நடத்தும் கல்லூரிகளில் வேலைக்கான இடஒதுக்கீடு இருக்கிறதா? மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
4) பகுத்தறிவு இயக்கத்திற்குத் தமிழகத்தில் வெகுஜன ஆதரவு எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இருப்பதுபோல ஒரு மாயை ஊடகங்களின் கடாட்சத்தால் உருவாக்கப்பட்டது. அந்த மாயையும் இப்போது மறைந்து வருகிறது. தனக்குக் கூட்டம் சேரவில்லை என்று ஈ.வே.ரா.வே சொல்லியிருக்கிறார்.
மனித நேயத்திற்கும் ஈ.வே.ரா.வின் கொள்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் அடி என்றார், அடித்தார்கள், உடை என்றார் உடைத்தார்கள், கொளுத்து என்றார் கொளுத்தினார்கள். இந்த அராஜகச் செயல்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியின் ஆதரவோடு நடைபெற்றன என்பதுதான் உண்மை… மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
5) தாழ்த்தப்பட்டவர் உரிமைகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் போராடியதில் ஈ.வேராவுக்கு தலைமைப் பீடம் உண்டா?
1962 தேர்தலில் ஈ.வேரா காங்கிரசுக்கு ஆதரவாகவும் தி.மு.க. விற்கு எதிராகவும் செயல்பட்டார். அப்போது தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அவர் பண்புக் குறைவாகப் பேசியதாக செய்தி வெளிவந்தது… மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
6) ‘ஹரிஜனப் பெண்கள் சொக்காய் போட ஆரம்பித்ததுதான் துணி விலை உயர்ந்ததற்குக் காரணம். ஹரிஜனங்கள் படிக்க ஆரம்பித்ததால்தான் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாகி விட்டது…’ என்பதெல்லாம் பெரியாரின் அபிப்பிராயம் என்பது கருணாநிதியின் கருத்து. இதைக் கருணாநிதியிடமே கேட்டு வீரமணி தெரிந்து கொள்ளட்டுமே… மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இதெல்லாம் உண்மையாங்க சாமி...................

அலைஸ் கால்ட்ரோன் - உலக அமைதிக்காக உழைத்த இந்து

அலைஸ் கால்ட்ரோன் - உலக அமைதிக்காக உழைத்த இந்து
~ அரவிந்தன் நீலகண்டன் மே 6th, 2008 பார்வை: 358 அச்சிட
ஜாஸ் இசை மேதையான ஜான் கால்ட்ரோனின் மனைவியான அலைஸ் கால்ட்ரோன் யாழினை ஒத்த ஹார்ப் எனும் இசைக்கருவியை இசைப்பதில் மேதமை உடையவராக விளங்கினார். ஹார்ப் இசைக்கும் பெண் இசைக் கலைஞர்கள் அரிதானவர்களே. கோல்ட்ரோனின் இசைக்குழுவில் அவர் விரைவில் பிரதான ஹார்ப் கலைஞரானார். இசையில் மேலும் மேலும் மூழ்கிய அவர் விரைவில் பியானோ ஆர்கன் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார் அத்துடன் இந்து இசை கருவிகளான சிதார் தம்பூர் ஆகியவற்றிலும் மேதமை பெற்றார்.
1970களில் இந்து ஆன்மிகத்தினால் ஈர்க்கப்பட்ட அவர் சுவாமி சத்சித்தானந்தாவிடம் மாணவரானார். பின்னர் தீட்சை பெற்று தன்னை முறைப்படி இந்துவாக்கி சனாதன தர்ம பாரம்பரியப்படி துரியசங்கீதானந்தா என பெயரினை மாற்றிக்கொண்டார். துரியா என அழைக்கப்பட்டார். பகவான் சத்திய சாய் பாபாவின் பக்தையாகவும் இவர் பல அழகிய ஆன்மிக பாடல்களை இசையமைத்துள்ளார்.
துரியா, Pramahansa Lake, ஜெய ஜெய ராமா (1969), துரியாவும் ராமகிருஷ்ணரும். சச்சிதானந்தத்தில் ஒரு யாத்திரை, சிவலோகா, ஐஸிஸும் ஓஸிரிஸும்,(1970) பிரபஞ்ச பிரக்ஞை (Universal Consciousness), ஹரே கிருஷ்ணா, சீதாராமா, ‘அமென் ராவின் அங்க்’ (1972)ராதாகிருஷ்ண நாம சங்கீர்த்தனம் (1976) ஆகியவை அவரது ஆன்மிக இசைவெளியீடுகளில் சில. இவர் இசையினை ஒரு பகவத் பிரசாதமாக காண்கிறார். அவரது பார்வையில் இசை ஒரு வழிபாடும் ஆகும். அது சாந்தத்தையும் ஆறுதலையும் குணப்படுத்துதலையும் அளிக்கும் இறை வரமாகும் என அவர் கருதுகிறார். அஸதோ மா ஸத்கமய தமஸோமா ஜோதிர் கமய ம்ருத்யோமா அமிர்தம் கமய எனும் உபநிடத மந்திரமே உலக வாழ்க்கையின் இருப்பினை சத்தியத்துடன் தொடர்பு படுத்துவதாக அவர் உணர்கிறார்.
1975 இல் கலிபோர்னியாவின் வேதாந்த மையத்தினை அவர் நிறுவி சனாதன தர்மத்தின் ஒளியினால் அமெரிக்க மக்களின் வாழ்க்கைக்கு வளமும் அமைதியும் அளித்து தொண்டு புரிந்தார். 2004 இல் தனது மகனும் ஸாக்ஸபோன் கலைஞருமான ரவி கால்ட்ரோனுடன் இணைந்து Translinear light எனும் இசைத்தொகுப்பை வெளியிட்டார். சீதாராமா, ஜகதீஸ்வரா, சத்திய சாயி ஈசா ஆகிய பாடல்கள் அத்தொகுப்பில் உள்ளன. ஜனவரி 12 2007 அன்று அவர் சமாதியடைந்தார். அமெரிக்க இசை கலைஞரும் சனாதன தருமத்தின் ஆன்மிக இசை பாரம்பரியத்தின் மூலமும் நாடு, இன மத பேதமின்றி உலக அமைதிக்காக உழைத்தவருமான இந்த பெண் கலைஞரினை உலக நன்மைக்கு உழைத்த இந்துக்கள் வரிசையில் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் தமிழ்இந்து.காம் பெருமை அடைகிறது.
அலைஸ் கோல்ட்ரானின் வலைத்தளம் : http://www.alicecoltrane.org/
இந்த தகவல் அனைத்தும் தமிழிந்து.காம் எனும் இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது,அவர்களுக்கு என் நன்றி

Friday, February 20, 2009

பகுத்தறிவு பகலவன்களுக்கு 10 கேள்விகள்?.

ஏன்,எதற்கு,எப்படி என்று கேள்வி கேட்பதே பகுத்தறிவு என்று சொன்னது தி,க,பெரியார் என்று நினைத்தால் தவறு.இந்த கேள்விகளை பழங்காலத்திலேயே கேட்க்கத்தூண்டியது நம்முடைய ஆன்மிகம், எடுத்துக்காட்டாக இதே கேள்விகளை பாரதப் போரின் போது அர்ஜுனன் கேட்ட போது அதிகப்பிரசங்கி வாயை மூடு என்று சொல்லாமல்,அதற்கு பகவான் கிருஷ்ணன் விளக்கம் அளித்ததால் நமக்கு கிடைத்ததே பகவத் கீதை.அந்த வழியில் நாணும் சில கேள்விகளை சிலரை நோக்கி வைக்க ஆசைப்பட்டே இந்தப் பதிவு.

பகுத்தறிவு பகலவன்களுக்கு 10 கேள்விகள்?.
1, கடவுள் இல்லை,இல்லவே இல்லை என்று கல்வெட்டுக்களும்,கொடிக்கம்பங்களும் இந்து ஆலயங்களின் எதிரே மட்டும் வைப்பது ஏன்? (இந்துக் கடவுள் மட்டுமே இல்லை என்று சொல்ல நினைப்பதாலா? மசூதி முன்பும்,தேவாலயம் முன்பும் வைத்தால் அவர்கள் இந்துக்களைப் போல் அமைதியாய் இல்லாமல் வீறு கொண்டு தாக்குவார்கள் என்பதாலா?)

2) கடவுளை மற,மனிதனை நினை. என்று சொல்லும் நீங்கள் இனம்,மொழி என்று அரசியல் செய்வது ஏன்? (தமிழன் இல்லாத வேறு எவறும் மனிதன் இல்லையா?)

3) கடவுள் இல்லை என்று சொல்லும் இயக்கத்தின் தலைமை இடமாம்,பெறியார் திடலில் கிருத்துவ மத பிரச்சாரங்களுக்கு இடம் அளிப்பது ஏன்?(ஒரு வேளை கிருத்துதான் உண்மையான கடவுள் என தி.க. நினைக்கிறதா? இல்லை கொள்கையைக்காட்டிலும் பணம் முக்கியம் என நாத்திகம் சொல்கிறதா?)

4) பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பனை அடி என்று சொல்லிவிட்டு,பார்ப்பன நண்பர்களை (பெரியாருக்கு ராஜாஜி,கலைஞருக்கு கல்கி,ராமமூர்த்தி இன்னும் பல)வைத்திருப்பதுதான் பெரியாரின் நாத்திகமா?

5) மாரியம்மனுக்காக தீ மிதிப்பதையும்,தமிழ்க் கடவுள் முருகனுக்கு அலகு குத்துவதையும் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லிவிட்டு,அதை கண்டிக்கும் தி.க. முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் முகரம் நாளில் உடலில் கத்தி,மற்றும் பயங்கர ஆயுதங்களால் தங்களை வருத்திக் கொள்ளும் செயலை மூட நம்பிக்கை என்று கண்டிக்காமல் இருப்பதுதான் நவீன நாத்தீகமோ?

6) பல பெரியோர்களின் எழுத்துக்களும் நாட்டுடைமை ஆக்கப்படும் போதும்,பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடைமை ஆக்க விடாமல் தடுத்து,காசு பன்னும் செயல்தான் பகுத்தறிவு பிரச்சாரமோ?

7) திராவிடன் என்று சொல்லி இயக்கம் ஆரம்பித்து,பின் திராவிட இனத்தில் ஒன்றான மலையாள M.G.ராமச்சந்திரனையும்,தெலுங்கன் விஜயகாந்தையும்,கன்னடன் ரஜினியையும் பிரித்து பேசுவது எந்த வகை திராவிடம்?

8) தமிழக மக்களுக்காக சல்லிக்காசை கூட செலவு செய்யாமல்,பெரியாரின் சொத்துக்களை எல்லாம்,தேர்ந்த தொழிலதிபர்களைப் போல்,கல்வி வியாபாரத்தில் முதலீடு செய்து விட்டு, சென்னை மக்களின் தாகம் தீர்க்க தெலுங்கு கங்கை திட்டத்திற்க்கு சாய் பாபா பல 100 கோடிகளை தரும் போதும்,தமிழக கிராமங்களில் மறுமலற்ச்சிக்காக ஜக்கி வாசுதேவ் பெறும் முயற்சி செய்வதையும் பார்தும்,சூடு,சொரனை இல்லாமல் இருப்பதுதான் நாத்திக வழியா? இதுதான் தமிழனின் தன்மான இயக்கமா?

9) அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்ஆலயம் தொழுவது சாலவும் நன்றுஎன்று வாழ்ந்து வந்த நம் தமிழர்களை,இந்தி எனும் அரக்கி வரக்கூடாது என்ற பெயரில் போராட்டம் நடத்தி,அன்னிய ஆங்கிலத்துக்கு நடைபாதை விரித்து தந்து,இன்று எங்கும் ஆங்கிலம்,எதிலும் ஆங்கிலம்,அழகு தமிழனின் வீட்டினுள்ளும் அன்னைத்தமிழ் அழித்து அன்னிய ஆங்கிலம் எனும் நிலையை உருவாக்கியதுதான் பகுத்தறிவு இயக்கத்தின் சாதனையோ?

10) இலங்கை மண்ணில் எம் இனத் தமிழர் சிங்களனின் அராஜகத் தாக்குதலில் அழியும் போதும், அண்ணண் கலைஞரின் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து,அன்னை இந்திராவின் அன்னிய மருமகள், இத்தாலி சோனியாவுக்கு வால் பிடிப்பதுதான்,அதிகாரத்தின் சுவையை நக்கிப் பிழைக்கும் நாத்தீகமோ?
எனது இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பின்னுட்டத்தில் வசை மொழிதான் பகுத்தறிவாளர்களால் இடப்படும் என்று தெரிந்தும் இன்தப் பதிவு,
என் கேள்விகள் தொடரும்
பகுத்தறிவு குஞ்சு பதிவாளர்களுக்கும்.

Wednesday, February 11, 2009

குருட்டு மீடியாவின் திருட்டுத்தனங்கள்

This is beyond funny…
….. or The great joke that is Indian Media - So, here is the latest transgression of Mr. Muthalik:
Hindustan Times:
a group of men intercepted the bus on the outskirts of Mangalore forced Shruti out, along with her co passenger, Shabeeb
They were interrogated about their relationship for over 20 minutes before being released.
“It is the Sri Rama Sene which is responsible for this incident as well,” Kunhambu told HT
NDTV:
Kunhambu told NDTV that his daughter and her friend were assaulted by Bajrang Dal, Ram Sena goons.
The MLA said that the bus conductor belonged to BJP. “He called Bajrang Dal, Ram Sena goons.”“They let my daughter go after holding her captive for one hour. The Muslim boy was released much later,” he said. “Ram Sena, Bajrang Dal activists snatched away my daughter’s mobile phone,” he added.
CNN-IBN:
According to reports Sene activists allegedly barged into the bus and picked up the girl, Shruti, and the boy and took them away in an autorickshaw.
Shruti said Ram Sene activists were angered by the fact that her companion was a Muslim.
Her father and Kerala MLA CH Kunhambu told CNN-IBN that he suspected Ram Sene to be behind the abduction.
Sify:
On the way, a boy, her classmate, also boarded the bus. As they were reaching Mangalore, she said a few men started shouting abuses at both of them,” Kunhambu said over telephone.
Later, these people were found to be activists of Sri Ram Sene, said the legislator from Manjeshwar in Kasargod district.
ExpressBuzz:
Kunhambu suspected the hand of Bajrang Dal and Sri Ram Sene men behind the merciless beating of his daughter and Shabeeb.
The Hindu:
Mr. Kunhambu said Shruthi and the boy, Shabeeb, a resident of Kasaragod, were forcibly dragged out of a private bus at Mahaveer Circle (Pumpwell Circle) and were made to sit in an autorickshaw allegedly by the Hindutva activists.
BUT WAIT….
Courtesy Offstumped, The Times Now makes this stunning disclosure that the accused were no un-Hindu hoodlums but instead they were members of the DYFI, the CPI-Mafioso’s student wing.
Two days after the attack on CPM MLA’s daughter and her friend, the accused claim to be a part of CPM’s student wing-the DYFI. More shockingly, these men say that their attempt was to protect the MLA’s daughter’s modesty. While police refused to share details,the arrested claim they belong to CPM’s student wing - the DYFI. On asked as to which party they belonged, the driver of the bus the couple was travelling in - Arvind Das said, “DYFI.” Surprisingly, the accused claim they were keeping the MLA’s daughter out of harm’s way. “They were oly trying to protect the girl’s modesty from being compromised,” defence lawyer told TIMES NOW.
This disclosure raises an interesting question if the whole episode was at the behest of the CPI-Mafioso father who perhaps may have shifted the blame once the story was grabbed the national media.
Be that as it may, this episode once again exposes the Talibanised closed mindset of the 24×7 national media which no longer cares about approaching news with an open mind.
Even before the police investigation was completed and the facts of the case were established, the media was quick to ascribe blame to saffron outfits.
***
Who exactly was behind the attack and attempted abduction? Can I request Tehelka or one of the other channels to do an investigation?
இந்த அராஜகத்தை ஒரு ஹிந்து அமைப்பு செய்கிறது என்பதற்காகவே இது மிக அதிகமாக மீண்டும் மீண்டும் ஊடகங்களில் காண்பிக்கப்படுகிறது. இப்படி ஒரு செய்தி சில மாதங்கள் முன்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. அதன் விவரங்களைப் பாருங்கள். இதைப் பற்றி யாரும் மூச்சுவிடவில்லை. எல்லா அராஜகங்களையும் ஒரே போல் கண்டிப்போம்.//http://www.hindu.com/2008/12/25/stories/2008122558910300.htmRestaurant vandalisedStaff ReporterTHIRUVANANTHAPURAM: An outlet of Cafe Coffee Day at Kowdiar in thecity was on Wednesday allegedly vandalised by a group of DYFIactivists at around 7 p.m.According to the restaurant management, the group attacked customersand caused damage to property.ஓAround 100 DYFI activists armed with sticks and stones attacked therestaurant. When some customers tried to escape, they also attackedthem, including women,ஔ a restaurant employee said. Being ChristmasEve, the restaurant was crowded, mostly with families.஑Immoralஒ activitiesA DYFI activist, however, told The Hindu that the DYFI Palayam areacommittee had taken out a march from Kowdiar Junction to the outlet toprotest against the restaurantஒs promotion of ஓimmoralஔ activitiesamong the youth, including bike and car racing, which recently led toan accident. ஓThis is also creating public nuisance,ஔ he said.He added that DYFI activists had only intended to conduct a peacefulmarch and dharna in front of the restaurant but restaurant staffprovoked them by throwing stones.The incident happened in the presence of the police and the media.Restaurant staff added that a police case would be registered onlyafter a formal correspondence with the head office at Bangalore.The Museum police, meanwhile, said that no arrests were made as therewas no complaint.//

Thursday, January 22, 2009

பகவான் கிருஷ்ணர் - வரலாற்று உண்மை

பகவான் கிருஷ்ணர் தோற்றம்,வாழ்க்கை,அவரது ஆட்சி,அவர் கட்டி ஆண்ட துவாரகை நகரம் அனைத்தும் ஒரு வரலாற்று உண்மை. அதை ஆதாரத்தோடு விளக்குகிறது இந்த ஆவணப்படம்.அன்பு சகோதரர்களே இதை பாருங்கள்,பரப்புங்கள். மறக்காமல் வாக்களியுங்கள்

நன்றி



Friday, January 16, 2009

அந்தரங்க பிரச்சனைகளுக்கு அரிய தீர்வுகள்

சித்த மருத்துவம் எனும் தமிழ் மருத்துவ குறிப்புகள்

குண்டாவதை தடுக்க
வாழைத்தண்டுச்சாறு,பூசணிச்சாறு,அருகம்புல்சாறு இம்மூன்றையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஏதாவது ஒரு சாற்றைக் குடித்து வர உடல் பெருக்கம் குறைந்து உடல் அழகு பெறும்.

ஆண்மை குறைவு நீங்க
தினசரி இரவு படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரத்திற்கு முன் ஒரு மாதுளம் பழம் மூழுவதும் சாப்பிட்டு வர குரை நீங்கும்.

சர்க்கரை கலந்த பசும் பாலில் உளுத்தம் பருப்பை ஊற வைத்து பின் ஊளுத்தம் பருப்பை காய வைத்து மாவாக்கி கூட சிறிது வெண்ணை விட்டு சிறிது கேக் செய்து சாப்பிட ஆண்மை குறைவு நீங்கும்

விந்து கெட்டிப்பட

ஆல மர பழங்களைக் கொண்டு வந்து சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு,ஆல மரத்தின் விழுதின் நுனிப் பகுதியையும் சேர்த்து சமனளவு எடுத்து மைய அரைத்து சிறு உருண்டை எடுத்து பசுவின் பாலில் அதிகாலைவெறும் வயிற்றில் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும்

ஆண உறுப்பு பலம் பெற

ஆம்பல்கிழங்கை காய வைத்து இடித்து தூள் செய்து வைத்துக் கொண்டு பசும் பாலில் கலந்து சாப்பிட பலன் கிடைக்கும்
ஆண்மை பலம் பெற
அரச மரத்தின் பழம்,வேர்,பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலைக் காய்ச்சி இறக்கியதும் போட்டுக் குடித்தால் ஆண்மை பலம் பெறும்